• Apr 19 2024

எந்தவொரு பிளானும் இல்லை சரியான பாதையில தான் போயிட்டு இருக்கிறேன்- மனம் திறந்த வாணிபோஜன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகையாக இருந்து தற்பொழுது வெள்ளித்திரையில் ஜொலிக்கும் பிரபலம் தான் வாணி போஜன். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிகாரம் 79 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஓமை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் விக்ரமுடன் இணைந்து நடித்த மகான் திரைப்படத்திலிந்து இவருடைய காட்சிகள் நீக்கப்பட்டதால் தொடர்ந்து சோகத்தில் இருந்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது 10 மேற்பட்ட திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

தந்பொழுது நடிகர் பரத்துடன் மிரள் என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் அப்படத்தின் ப்ரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார் வாணி போஜன். அப்படி ஒரு பேட்டியில், இப்படியான படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைபடுவது என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு வாணி போஜன், எந்தவொரு பிளான்லாம் ஒன்னும் இல்லை. எடுக்குற படம் எல்லாம் சரியாக எடுத்து வருகிறேன். அவசரப்பட்டு எதையும் எடுக்கல.காசுக்காகவோ பிரடெக்ஷன் அவுஸ் சொல்றாங்கனோ எடுத்ததில்லை. சரியான பாதையில் சென்று வருகிறேன். ஜக்குபாய் படத்தை போன்ற கதையில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார் .

Advertisement

Advertisement

Advertisement