• Apr 19 2024

தற்கொலையில் முடிந்த இளம் நடிகை உயிர்... 2ஆம் திருமணத்தை நம்பி ஏமாந்த பிரபலம்.. மரணத்தின் மடியில் சிக்கிய நட்சத்திரங்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் அவர்களுடைய திரையுலக வாழ்க்கைக்கும், சொந்த வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் கூற முடியும். சினிமாவால் பல நடிகைகளின் வாழ்க்கை சீரழிந்த வரலாறும் உண்டு.

அதாவது யாரையாவது ஒருவரைத் திருமணம் செய்து பின்னர் அந்த வாழ்க்கை போரடித்ததும் அவரைவிட்டு பிரிந்து வேறொருவரை நம்பி இரண்டாம் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் என்று தெரிந்தும் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து பல நடிகைகள் தங்களது வாழ்க்கையை தாங்களே அளித்துள்ளார்கள். அவர்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

தமிழ் சினிமாவில் சிவாஜி அவர்களுக்கு இணையாக பேசப்பட்டு புகழின் உச்சியில் இருந்தவர் தான் நடிகை சாவித்திரி. இவர் ஏற்கனவே திருமணமாகிய நடிகர் ஜெமினி கணேசனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். அவரை நம்பி திருமணம் செய்து கொண்ட சாவித்திரி, தயாரிப்பில் ஈடுபட்டு பல கோடி சொத்தையும் இழந்தது தான் மிச்சம். அதுமட்டுமல்லாது மதுவுக்கு அடிமையாகி கடைசியில் சாவித்திரி உருகுலைந்து மரணமடைந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.


அடுத்ததாக நடிகை மஞ்சுளா. அதாவது எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த மஞ்சுளா, நடிகர் விஜயகுமாருக்கு 3 குழந்தைகள் இருப்பது தெரிந்தும் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஒரு சில காரணங்களால் மார்க்கெட் இல்லாமல் போய் அவரும் குடிப்பழக்கத்தால் மரணமடைந்தார்.


இவர்களை போலவே டாப் நடிகையாகத் திகழ்ந்தவர் தான் ஸ்ரீதேவி. இவர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட போனி கபூரை இரண்டாம் தாராமாக கல்யாணம் செய்து கொண்டார். யாருக்கு பயப்படுகிறாரோ இல்லையோ போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த அர்ஜுன் கபூருக்கு மட்டும் ஸ்ரீதேவி அடிக்கடி பயந்து பயந்து வாழ்ந்து வந்தார். ஆனால் கடையில் துபாயில் நடைபெற்ற திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி அவரது அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.


ஒரு காலத்தில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகை ஷோபா. இவர் சிறு வயதிலேயே மிகப்பெரிய இடத்தினை தன் நடிப்பால் ஆக்கிரத்தார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவை நம்பி திருமணம் செய்து கொண்ட ஷோபா தற்கொலை செய்து கொண்டதற்கு அவரும் ஒரு காரணமாக திரையுலகில் அந்தக் காலத்தில் கிசுகிசுக்கப்பப்பட்டது.


இவ்வாறாக பல நடிகைகளின் மரணம் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு சம்பவமாக இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. இரண்டாம் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்பவர்களும் உண்டு. அதேநேரத்தில் அதேநேரத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்தவர்களும் உண்டு.

Advertisement

Advertisement

Advertisement