• Apr 19 2024

குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்த ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகின்றது.அவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் தான் தீபக் மற்றும் அபிநவ்யா.

இதில் அபிநவ்யா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் நடித்து வருகின்றார்.அதே போல தீபக் ஷு தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை என்னும் சீரியலில் முதலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதன் பின்னர் தற்பொழுது விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும் தீபக் தனியாகவும் சொந்த தொழில் செய்து வருகிறார்.


அண்மையில் இந்த ஜோடி ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டார்கள், அதாவது அபிநவ்யா கர்ப்பமாக இருப்பதாக சீமந்த புகைப்படங்களுடன்  அறிவித்தார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு மகன் பிறந்துள்ளார். 


மருத்துவமனையில் தனது மகன் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார் தீபக்.இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்தினைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement