• Apr 20 2024

நடுராத்திரியில் திருட்டு வேலையில் ஈடுபடும் அசீம்... உண்மையை போட்டுடைத்த தனலட்சுமி... வெளியானது வீடியோ.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆனது மற்ற சீசன்களை விடவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இதற்கு காரணமே அங்குள்ள போட்டியாளர்கள் தான். இதனால் தான் ஒவ்வொரு நாளும் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் வாரந்தோறும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு நடந்த முக்கிய பிரச்சனைகள், மற்றும் அநீதிகள் குறித்து வழக்கு தொடுக்க முடியும்.

அந்த வழக்கை பிக்பாஸ் முக்கியமான வழக்காக ஏற்றுக்கொண்டால் அதற்கான விசாரணை நடத்தப்பட்டு சிறந்த தீர்ப்பு வழங்கப்படும். இந்நிலையில் இந்த டாஸ்க்கில் தனலட்சுமி அசீம் செய்த திருட்டு செயல்களை முன்வைத்து அவர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகள்  தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் தனலட்சுமி கூறுகையில் "பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் தேவையான விஷயமே உணவு தான். நீங்கள் அனுப்பும் கொஞ்ச நஞ்ச பழங்களும், தயிரும் காணாமல் போகிறது. அதனை அசீம் தான் அடிக்கடி எடுத்து சாப்பிடுகிறார். இதைப்பற்றி கேட்டால், அது அழுகிப்போன பழம் என்று ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு காரணம் சொல்கிறார்" என்று கூறுகின்றார்.

அதுமட்டுமல்லாது "வாழைப்பழம் எல்லாமே காணாமல் போய்விடுகிறது. ஒரு நபருக்கு 2 பழங்கள் என்று தான் கொடுக்கிறீர்கள். ஆனால் அவர் ஒருநாளைக்கு இரண்டு பழங்கள் என நினைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு விடுகிறார்.

இதை நேரடியாக கேட்கவும் முடியவில்லை. தயிரை நடுராத்திரி எடுத்து சாப்பிட்டு காலிசெய்துவிடுகிறார். அதனால் நான் அசீம் மீது புகார் கொடுக்கிறேன்" என தனலட்சுமி அந்த வீடியோவில் மிகவும் தைரியமாக கூறி உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement