• Mar 28 2024

பிரசாந்தை வளைத்துப் போட நினைத்த டாப் நடிகைகள்... கடைசியில் அஜித் காதலியை கூட கண்டுக்கலயாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் குறிப்பாக 90காலக்கட்டத்தில் விஜய், அஜித்திற்ககே சீனியராக இருந்து சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்திருக்கின்றார். பிரசாந்த் நடிப்பில் மட்டுமல்லாது தன்னுடைய அழகினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இன்றுவரை நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றார்.

இவ்வாறாக பல இளம் பெண்களின் ஆசை நடிகராகவும் ஜாக்லெட் பாயாகவும் திகழ்ந்து வந்த பிரசாந்தை, தங்களுடைய வலையில் சிக்கவைக்க பல நடிகைகள் போட்டி போட்டுள்ளனர். அதில் முதல் ஆளாக இருப்பது வேறு யாருமில்லை நடிகை மோகினி தான். 


'உனக்கென பிறந்தேன்' என்ற படத்தின் வாயிலாக அறிமுகமாகிய நடிகை மோகினி அப்படத்தில் பிரசாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தில் கதைக்கு ஏற்றவாறு படு ஓவரான கிளாமரில் பிரசாந்தை மயக்க நினைத்தும் மோகினியால் முடியாமல் போனது. அதன்பின் மீண்டும் 'கண்மணி' என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்தும், அவரின் வலையில் சிக்கவில்லை பிரசாந்த்.

இவரைப் போலவே தமிழில் 'மணல் கயிறு, புதிய சகாப்தம்' உள்ளிட்ட படங்களில் நடித்த ஒருவரே நடிகை வினோதினி. அதுமட்டுமல்லாது பாலு மகேந்திராவின் 'வண்ண வண்ண பூக்கள்' என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் . 


இப்படத்தில் பிரசாந்த் இளமை தோற்றத்தில் ரொம்பவே அழகாக இருப்பதை அறிந்து வினோதினி அவருடன் நெருக்கமாக நடித்து அசத்தினார். அப்போது இருவர் மீதும் காதல் கிசுகிசு செய்திகள் வெளியாகி இருந்தன. அப்படி இருந்தும் கூட பிரசாந்த் அவரைத் துளி கூட அதை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார்.

மேலும் 90காலகட்டத்தில் கனவுக்கன்னி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை மதுபாலா. இவர் 'செந்தமிழ்ச்செல்வன்' என்ற படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.


இப்படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி பக்காவாக அமைந்தது. படத்தில் காதலர்களாக நடித்த இவர்கள் ரியல் காதலர்களாக மாறுவார்கள் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் மதுபாலா பக்கம் அதன்பின் தரும்பிக்கூடப் பார்க்கவில்லை பிரசாந்த்.

இதுபோன்று தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்து அஜித், சரத்குமார் உள்ளிட்ட பலருடன் காதல் சர்ச்சையில் சிக்கிய ஒருவரே நடிகை ஹீரா.


இவர் 'கிருஷ்ணா' படத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்து அவர் மீது சில காதல் வலைகளை போட்டார். ஆனால் பிரசாந்த் அதற்கு இடம் கொடுக்காமல் வேறு பக்கம் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

இவர்களை போல் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக மாறி தன்னுடைய தொடை அழகை காண்பித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தவர் நடிகை ரம்பா.


இவர் 1999 இல் 'பூமகள் ஊர்வலம்' படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியும் ரம்பாவையே கண்டுக்கொள்ளாத முதல் நடிகராக திகழ்ந்து தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டாராம்.

Advertisement

Advertisement

Advertisement