• Apr 20 2024

த்ரிஷா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்... அதுவும் ஒண்ணு இல்லை மூணாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாகவே இருந்து வருபவர் த்ரிஷா. இன்றுவரை திரையுலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து வருகின்றார். இவர் ஜோடி  சேராத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு பல படங்களில் நடித்துள்ளார்.


மேலும் 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் ஆனது இருமடங்காக ஏறி உள்ளது. இந்த ஒரு படத்தின் வெற்றியால் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தவகையில் இப்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறாராம். 


இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பே 'கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம்' ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து முடித்து விட்டு ரிலீசுக்காக காத்து இருந்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பாராத விதமாக சில பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகாமல் பல வருடங்களாக முடங்கி கிடந்தன.

இப்படங்களை நிறைய தடவை திரைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்தும் அது நடக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே த்ரிஷா நடிப்பில் வந்த சில படங்கள் எதிர்பார்த்தபடி வசூல் பெறாததால் 3 படங்களுக்கான வியாபாரத்திலும் இழுபறி ஏற்பட்டதாக அப்போது பேசப்பட்டது. 


அந்தவகையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி காரணமாக பல வருடங்களாக முடங்கி இருக்கும் த்ரிஷாவின் இந்த மூன்று படங்களுக்கும் மவுசு ஏற்பட்டு உள்ளது. இதனால் 3 படங்களையும் அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. இதனை அறிந்த த்ரிஷா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement