• Apr 20 2024

ஒட்டு மொத்த பார்வையாளர்களின் கண்ணீருக்கு மத்தியில்.. சூப்பர் சிங்கரிலிருந்து வெளியேறிய பாடகி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உண்டு. இதில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் வாய்ப்பு தேடி அலைகின்ற சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பவையாக அமைந்திருக்கின்றன. 


அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'சூப்பர் சிங்கர்'. இந்த நிகழ்ச்சியானது 8சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 9-ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நகைச்சுவை கலந்த பாணியில் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.


மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலரும் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். வாராவாரம் இந்நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழமை. 

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சினேகா என்ற போட்டியாளர் வெளியேறியுள்ளார். இந்த சீசனில் சிறந்த பாடகி என நடுவர்களின் பாராட்டைப் பெற்ற சினேகா தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகின்றமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


மேலும் சினேகா மற்றும் பிரியா ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகளாக தான் சூப்பர் சிங்கரில் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தார்கள். ஆனால் தற்போது சினேகா குறைந்த வாக்குகள் பெற்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சகோதரி சினேகா குறித்து பிரியா பேசுவதை கண்டு நடுவராக இருக்கும் அனுராதா ஸ்ரீராம் கண்கலங்கி விட்டார். அதுமட்டுமல்லாது ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கண்களிலும் அந்தத் தருணம் கண்ணீரை வர வைத்திருக்கின்றது.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement