• Apr 20 2024

பாக்கியாவை கிண்டலடித்த ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- தூக்க மாத்திரையை சாப்பிட்ட இனியா- பதறி அடித்துக் கத்திய கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த  வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கேன்டீனுக்கு வரும் ராதிகா கேக் செய்யவில்லையா, உங்கள் ஆடரை அப்பவே கான்சல் செய்கிறேன் பாருங்க.ஒரு கேக் கூட செய்யத் தெரியலனா எப்படி இப்பவே, நீங்க இந்த இடத்தை விட்டு போற மாதிரி பண்ணுறேன் என்று சொல்ல பாக்கியா நக்கலாக கெஞ்சுகின்றார். இருப்பினும் ரதிகா எதையும் காதில் வாங்காமல் கான்டீன் உள்ளுக்குள்ளே செல்கின்றார்.


அப்போது கேன்டீனில் வேலை செய்யும் பெண் ஒருவர் கேக்கினைக் கொண்டு வருகின்றார். இதனைப் பார்த்த ராதிகா அதிர்ச்சியடைகின்றார். அப்போது பாக்கியா ராதிகாவை கிண்டலடிக்க ராதிகா அந்த இடத்தை விட்டுப் போகின்றார். பின்னர் வீட்டில் இனியாவை  போன் பார்த்துக் கொண்டிருப்பதால் இனியாவைப் போய் துாங்கச் சொல்கின்றார்.

இதனால் இனியா ராதிகாவுடன் சண்டை பிடிக்க கடுப்பான கோபி இனியாவைத் திட்டுகின்றார். எதற்காக நீ இப்படிக் கோபமாகப் பேசுகின்றாய். அவங்க துாங்க தானே சொன்னாங்க என்று சொல்ல இனியா அவங்க யாரு டாடி எனக்கு அட்வைஸ்ட் பண்ண எனக்கு அவங்கள பிடிக்கல என்று சொல்ல கோபி இனியாவுக்கு அட்வைஸ்ட் பண்ணி விட இனியா இங்கிருந்து கோபமாகப் போகின்றார்.


பின்னர் ராதிகா தன்னைத் திட்டியதை நினைதது நினைத்து இனியா அழுது கொண்டே தாத்தாவின் மாத்திரைகளை எடுத்து விழுங்கி விடுகின்றார். பின்னர் தான் இறந்து விடுவேனோ எனப் பயந்து போய் தாத்தாவை எழுப்பி தான் மாத்திரை போட்ட விஷயத்தை சொல்ல தாத்தா பதறிஅடித்து கோபியை எழுப்பி நடந்ததைச் சொல்லி இனியாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக் கொண்டு போகின்றார். இதனை தாத்தா பாக்கியாவுக்கு சொல்ல பாக்கியா பதற்றத்தில் அழுது கொண்டிருக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement