• Jun 04 2023

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அந்த சீரியல் பிரபலம்...ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் அண்ணன் தம்பிகளின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது.இதில் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் புதிய சீரியலில் நடிக்கப்போகின்றார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது.

அந்தவகையில் அவர் தற்போது கிழக்கு வாசல் என்ற தலைப்பில் புதிய சீரியல் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த சீரியலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கியமான ரோலில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

மேலும் இதில் சஞ்சீவ் கமிட் ஆகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் இவர் வெளியேறினார்.அத்தோடு  இவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வெங்கட் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வெங்கட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் போது எவ்வாறு புதிய சீரியலில் நடிக்க முடியுமென்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.


இவ்வாறுஇருக்கையில் இது குறித்து பேசிய வெங்கட், "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜூன் மாதத்திற்குள் முடிந்து விடும். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவதற்கும் புதிய சீரியல் தொடங்குவதற்கும் சரியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் ஜீவா புதிய சீரியலில் நடிக்கப்போகிறார் என்று தெரிந்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் சீக்கிரம் பாண்டியன் ஸ்டோரஸ் முடியப்போகின்றது என வருத்தப்பட்டு கெமணட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement