• Apr 24 2024

இதே வேலையாய் போச்சு...நடிகையிடம் வாயைக் கொடுத்து மன்னிப்பு கேட்ட அசீம்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல சீரியல்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அருண் குமார் ராஜன்.இவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் `கண்ட நாள் முதல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

சின்னத்திரை நடிகர் அர்னவ் - திவ்யா பிரச்னை குறித்து அவர் அவருடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அத்தோடு, மறைந்த சின்னத்திரை நடிகையின் குழந்தைகளுக்கு உதவக் கோரி வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இவ்வாறு சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக காணப்படுவார்.


இது பற்றி பிரத்யோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அருண் பல வியடங்களை கூறி இருந்தார்.

அதில் இவரிடம் 'பிக் பாஸ்' பார்க்குறீங்களான்னு கேட்கவும் சிரித்தார்.மேலும் கூறிய இவர் "அப்பப்ப பார்க்கிறேன். அந்த வீட்ல இருக்கிற பெரும்பாலானவங்க ரியலாகத்தான் இருக்காங்க. 

அசிம் கூட `பூவே உனக்காக' தொடரில் நடிச்சிருக்கேன். அந்த சீரியலில் நடிக்கும்போது செட்ல ஹீரோயினை தகாத வார்த்தை சொல்லி திட்டிட்டார். அத்தோடு  அந்த செட்ல இருந்த எல்லா பெண் ஆர்ட்டிஸ்ட்களும் அவர் மன்னிப்பு கேட்டாதான் நாங்க நடிப்போம்னு சொல்லிட்டாங்க.


 அப்ப கூட அவருக்கு சப்போர்ட் பண்ணிதான் அந்த சீரியல் தயாரிப்பாளர் பேசி இருந்தார். ரொம்ப உறுதியா மன்னிப்பு கேட்காம நாங்க நடிக்க மாட்டோம்னு அவங்க சொன்னதால மட்டும்தான் அசிம் மன்னிப்பு கேட்டார்.மேலும்  அவருடைய ரியல் முகத்தைதான் அவர் பிக் பாஸ் வீட்ல காட்டிட்டு இருக்கார் என்று சொல்லுவேன். அதே மாதிரி, ஆயிஷாவையும் எனக்குத் தெரியும். அவங்களால அவங்களுடைய கோபத்தை கன்ட்ரோல் பண்ணவே முடியாது!" என்று கூறி இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement