மணிரத்னம் இயக்கிய படு பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆனது.
இப்படம் வசூலில் சாதனை புரிந்து வரும் நிலையில் விரைவில் 500 கோடி என்ற மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் வசூலில் மாஸ் காட்டுகிறது.
மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்கள் மனதில் இருக்கும் கேள்வி.இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள்படி பொன்னியின் செல்வன் 2 அடுத்த வருடம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
அதற்காக பணிகளை தற்போது மணிரத்னம் டீம் தொடங்கி செய்து வருகிறார்களாம். இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!