• Apr 24 2024

கணவனால் மார்க்கெட்டை இழந்த சாயிஷா... ஆர்யா தான் இதற்கு காரணமாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை சாயிஷா. இவர் தமிழில் ஒருசில படங்களிலேயே நடித்திருந்தாலும் தன்னுடைய அழகாலும், சிறந்த நடிப்பினாலும் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்.


அதாவது 'காப்பான், கடைக்குட்டி சிங்கம், வனமகன்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார். அதன்பின்னர் 'கஜினிகாந்த்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடிபோட்டு நடித்திருந்தார். இவ்வாறு ரீல் காதலர்களாக நடித்து வந்த இவர்கள் ரியல் வாழ்க்கையிலும் ஜோடியாக காதலித்து வந்தனர்.


அதனைத் தொடர்ந்து 2017ல-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டனர். இத்தம்பதிகளின் நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆர்யா சாயிஷாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. 


குழந்தையை இதுவரையில் காட்டாமல் இருவரும் தங்களுடைய ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர்.


மிகவும் குறைந்த வயதுடைய இளம் நடிகையாக இருப்பவர் சாயிஷா. இவருக்கு வெறும் 25 வயது தான் ஆகிறது. அப்படி இருக்கையில் திருமணத்திற்கு பிறகு சாயிஷா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இதற்கு காரணம் அவருடைய கணவர் ஆர்யா தான் எனவும், அவரே சாயிஷாவை நடிக்கவிடமாமல் தடுத்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த யூடியூப் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.


இதனைப் பார்த்த பலரும் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருப்பதும், மார்க்கெட்டை இழப்பதும் ,கணவர்கள் நடிக்கவிடாமல் தடுப்பதும் சினிமாவில் சகஜம் தான் எனக் கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement