• Apr 25 2024

கோவை குணாவின் மரணத்திற்கு காரணம் மது அல்ல.. இது தான்.. பகீர் தகவலைக் கூறிய வெங்கடேஷ் ஆறுமுகம்.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மிக்ரி கலைஞர் கோவை குணாவின் உயிரிழப்பானது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இவரது திடீர் மரணத்தை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் கோவை குணாவின் நண்பரும், கலக்கப்போவது யாரு சீஸன் 2 சாம்பியனுமான வெங்கடேஷ் ஆறுமுகம் அவரின் இறப்பிற்கான காரணம் குறித்து தற்போது தெரிவித்திருக்கிறார். அதாவது "கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்னை இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அவர் டயாலிசிஸ் சிகிச்சை தீவிரமாக எடுத்து வந்தார். அவரின் நண்பர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து எங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை அவருக்கு செய்துகொண்டுதான் இருந்தோம். 

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே அவர் இறந்துவிடுவார் என்றே அனைவரும் நினைத்தோம். அந்த அளவுக்கு அவரது உடல்நிலை அந்த சமயத்தில் மோசமாக இருந்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அவரை உற்சாகமாகவும் உயிருடனும் வைத்திருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு மட்டும் தான்" என்றார்.


அதுமட்டுமல்லாது "கொரோனாவால் லாக் டவுன் போடப்படுவதற்கு முன்புவரை பல நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு தான் இருந்தார். ஆனால் கடந்த ஏழு எட்டு மாதங்களாக அவரால் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இரண்டு மகளுக்குமே நல்ல படியாக திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவருடைய இந்த இழப்பு எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு" எனவும் கண்ணீர் மல்க கூறினார்.


மேலும் வெங்கடேஷ் ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் "சிவாஜி கணேசனைப் போல சிம்மக்குரலோன்! பல குரல் திறமையில் சிரிப்புக் குரலோனும் கூட! மிமிக்ரி மட்டுமின்றி அந்தந்த நடிகர்களின் உடல் மொழியையும் வெளிக் கொண்டுவரும் ஒப்பற்ற கலைஞன்! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்களை தனது அரிய நகைச்சுவைத் திறனால் சிரிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞன். இன்று நம்மோடு இல்லை!

அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் அசத்தல் குடும்பத்திற்கும் இது ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறோம்! கண்ணீருடன் அசத்தல் குடும்பத்தினர்" என உருக்கத்துடன் நீண்ட பதிவை இட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் மதுவால் தான் கோவை குணா இறந்தார் என மதன் பாப் மறைமுகமாக கூறிய நிலையில் தற்போது வெங்கடேஷ் ஆறுமுகம் சிறுநீரக பிரச்சினையினால் தான் இறந்துள்ளார் எனக் கூறியுள்ளமை ரசிகர்கள் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement