• Apr 19 2024

ஹரி மற்றும் மேகனால் மிகவும் புண்பட்ட மகாராணி! அரச குடும்ப பதிவேடுகள் மூலம் அம்பலமான ரகசியங்கள்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்பில் இருந்து வெளியேறும் முடிவை ஹரியும், அவர் மனைவி மேகனும் எடுத்தது மகாராணியின் மனதை மிகவும் காயப்படுத்தி சோர்வடைய வைத்தது என அரச குடும்ப பதிவேட்டில் (royal book)ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி நியூ ராயல்ஸ் என்ற பதிவேட்டு புத்தகத்தில் இது தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. The New Royals - Queen Elizabeth’s Legacy and the Future of the Crownன் நூலாசிரியர் Katie Nicholl கூறுகையில், மறைந்த ராணியாருக்கு நெருக்கமானவர்கள் சொன்ன ஆதார தகவலின்படி, ஹரி, மேகன் குடும்பத்தை விட்டு வெளியேறும் முடிவைப் பற்றி சிந்திக்க கூட ராணியார் விரும்பவில்லை.

ராணி மிகவும் புண்பட்டு, எனக்கு தெரியாது, எனக்கு கவலையில்லை என வேதனையுடன் ஒருசமயம் அது குறித்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஹரியின் முடிவால் தான் விரும்பிய நேரத்தில் அவரின் பிள்ளைகளும், தன்னுடைய கொள்ளு பேரன், பேத்தியுமான Archie and Lilibet ஆகியோரை பார்க்க முடியவில்லை என்ற வருத்தமும் ராணிக்கு இருந்தது என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement