தமிழ் சினிமாவில் காமெடி புயல் என ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்டவர் நடிகர் வடிவேலு. இவர் தன்னுடைய சிறப்பான நகைச்சுவைப் பாணியின் வாயிலாக பல ரசிகர்களை கட்டிப் போட்டவர். இவரது காமெடிக்காகவே பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றுத் தந்தன. விஜய், அஜித், சூர்யா, கமல், விஜயகாந்த் எனப் பல முன்னணி நாயகர்களுடன் இவர் தொடர்ந்து நடித்தார்.
இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த இவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் காணப்பட்டது. எனினும் அதிலிருந்து மீண்டு வெற்றிகரமாகத் திரும்பி வந்த வடிவேலு தற்போது கோலிவுட்டில் தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
அதாவது சுராஜ் இயக்கத்தில் இவர் 4ஆவது முறையாக இணையும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் 'நாய் சேகர்' என்ற டைட்டிலை மட்டுமே வைக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் இந்த டைட்டிலில் நடிகர் சதீஷ் நடித்த படம் ஒன்று ஏற்கெனவே வெளியானதால் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கும் தயாராகியுள்ளது.
அந்தவகையில் இப்படமானது வரும் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வடிவேலுடன் இணைந்து நடிகை ஷிவானி நாராயணன், யூடியூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலரும் முக்கிமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் உடைய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் துப்பறியும் நிபுணராக வடிவேலு நடித்து அசத்தி இருக்கின்றார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள 4 பாடல்களையும் வடிவேலுவே பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடிவேலு பாடும் பாடல்களை எதிர்பார்த்து எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டமே காத்திருப்பது வழமை. அதாவது இவரின் பாடல்கள் எப்போதுமே தனிப்பட்ட முறையில் ரசிகர்களின் பேவரிட்டாக அமையும். இவ்வாறாக இருக்கும் போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் அனைத்து பாடல்களையும் வடிவேலு பாடியுள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாது அந்தப் பாடல்கள் வெளியாகும் நாளினை எதிர்பார்த்து ரசிகர்கள் இப்போதிருந்தே காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.
Listen News!