• Apr 25 2024

ரச்சிதாவை பார்க்க வந்த நபர்கள்...எமோஷ்னலாக கண்கலங்கி அழுத தருணம்..வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமான பிக்பாஸில் தற்போது அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன்,ரச்சிதா உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர்.

மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்திருந்தனர். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ரச்சிதாவின் அம்மா மற்றும் குடும்பத்தார் வர கண்கலங்கி அழுகின்றார்.அதன் பிறகு அவரின் அம்மா ஒரு புகைப்படத்தை குடுக்க அதைப்பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அம்மா கையால் சாப்பிட்டு அவரின் மடியில் படுத்து உறங்குகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...









Advertisement

Advertisement

Advertisement