• Apr 20 2024

ஆதிரை போடும் புதிய திட்டம்...குணசேகரனின் நிலை...கதிரை திசை திருப்ப ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்..விறுவிறுப்புடன் எதிர்நீச்சல்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது இதில் குணசேகரன் வீடே ரணகளமாகி இருக்கின்றது.  கதிரின் அட்டகாசமோ கை மீறிய வண்ணம் இருக்கின்றது. எப்போ இந்த வீடு மறுபடியும் கலகலப்பாக மாறும் என்பதனை காண பலரும் ஆவலுடன் உள்ளனர்.இந்நிலையில் ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ஜனனி அண்ணியும் சக்தியும் என் கூட வரணும் என ஆதிரை கூறுகின்றார்.அதற்கு குணசேகரன் அவர்கள் எதற்கு என கேட்கின்றார்.

துணையாய் இருக்கும் என ஆதிரையின் தாயும் சப்போர்ட் பண்ண குணசேகரன் உடனே அது துணையா இருக்க இல்லை வினையாய் இருக்க எனக் கூறுகின்றார்.

இது ஒரு புறம் இருக்க சக்தி கதிரின் மனைவி ஜனனி என மூவரும் காரைில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.அதில் சக்தி கூறுகின்றார் அங்க தான் அருணும் கதிரும் தங்கி நிற்கின்றார்கள் என கூறியதும் எல்லோரும் பதட்டம் அடைகின்றனர்.

இதன் பின் கதிரை திசை திருப்ப ஜனனி அவரின் மனைவிக்க ஜடியா கொடுக்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement