• Apr 19 2024

படம் சூப்பராக இருக்கின்றது நேருக்கு நேர் பாராட்டைத் தெரிவித்த பிரபல நடிகர்-மனம் நெகிழ்ந்த மாதவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சாக்லட் பாயாக வலம் வந்தவரே நடிகர் மாதவன். இவரின் நடிப்பிற்கும், அழகிற்கும் என்றே தனி ரசிகர் கூட்டம் ஒன்று இன்றுவரை அவருக்கு உண்டு. நடிகர்கள் பலரும் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞர்களாகவே தற்போது மாறி வருகின்றனர். இதற்கு மாதவன் ஒன்றும் விதி விலக்கானவர் இல்லை.

இந்தவகையில் தற்போது மாதவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படமே ராக்கெட்ரி. இப்படத்தில் இயக்குநராக மட்டுமன்றி கதாநாயகனாகவும் இவரே நடித்துள்ளார். இப்படத்தில் மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கம் மட்டுமல்லாமல் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. நடிகராகப் பலரின் மனதையும் கவர்ந்து விட்ட மாதவன்இப்படத்தினூடாக இயக்குநராகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். இவருடன் இணைந்து இப்படத்தில் நடிகை சிம்ரனும் நடித்துள்ளார்.

இப்படத்தில் கிரியோஜெனிக் என்ஜின் தகவலை இந்தியாவிற்கு கொண்டுவரும் நம்பி நாராயணனின் முயற்சி மற்றும் அதைத் தொடர்ந்து அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சிறப்பாக ரசிகர்களுக்கு புரியும் வகையில் இப்படத்தினுடைய கதை அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் திரையரங்கிற்கு நேரில் வந்த மாதவனை பார்த்து நடிகர் கூல் சுரேஷ் "படம் சூப்பராக இருக்கின்றது" என அவரை நேருக்கு நேர் பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது "வெந்து தணிந்தது காடு, ராக்கெட்ரி படத்திற்கு வணக்கத்தை போடு" என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் கூல் சுரேஷ் இவ்வாறு பேசியதையடுத்து மாதவன் மன நிறைவான நெகிழ்வுடன் அவரை பார்க்கிறார்.

மாதவனை நேரில் சந்தித்து நடிகர் கூல் சுரேஷ் பாராட்டிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement