• Apr 19 2024

மஹா - ரவியிடம் அநாகரீகமாக கேள்வி கேட்ட நெறியாளர்..கொந்தளித்த பிரபல இசையமைப்பாளர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

புதுமண தம்பதிகளான மகாலக்ஷ்மி ரவீந்தரிடம் அநாகரீகமாக கேள்வி கேட்ட நெறியாளரை கடுமையாக  பேசியுள்ளார் பிரபல இசையமைப்பாளர்.

 பிரபல சின்னத்திரை நடிகையான மகாலக்ஷ்மியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த முதலாம்  தேதி திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் திருப்பதியில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.அந்த புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

ரவீந்தர் குண்டாக இருப்பதால் பணத்திற்காகதான் மகாலக்ஷ்மி அவரை திருமணம் செய்து கொண்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. தங்களின் திருமணத்தை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் மகாலக்ஷ்மியும் ரவீந்தரும். அத்தோடு ஊடகங்களுக்கும் பேட்டிக் கொடுத்து வருகின்றனர்

எனினும் அந்த வகையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு மகாலக்ஷ்மியும் ரவீந்தரும் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர். அப்போது அந்த தொலைக்காட்சி சேனலின் நெறியாளர், உங்களுக்கு யார் பொருத்தம் பார்த்தது? என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே? இரண்டாவது திருமணம் செய்தது நெருடலாக இல்லையா? ரவீந்தர் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறீர்கள் என எரிச்சல் படுத்தும் வகையில்  பல கேள்விகளை கேட்டார்.

இதற்கு நடிகை கஸ்தூரி ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தனும் இதுகுறித்து  தற்போது பேசியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, சத்தியம் தொலைக்காட்சியில் முக்தர் அகமது என்பவர், அரசியல் தலைவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அழகாக கேள்விகளை கேட்டு வருகிறார் என மகிழ்ச்சி அடைந்தேன்.



நல்ல தொகுப்பாளர் கிடைத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் ரவீந்தர் விஷயத்தில் அவர் கேட்ட கேள்விகள் அநாகரீகமாகவும் அறிவில்லாதவர்கள் கேட்பது போலவும் இருந்தது.அத்தோடு  ரவீந்தரிடம் முதல் திருமணத்தை விரும்பி தானே செய்து கொண்டீர்கள், பின்னர் ஏன் கசந்தது என்றும் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறீர்கள் என்றும் அவரை அசிங்கப்படுத்துவது போல் கேள்விகளை கேட்டார்.



மகாலக்ஷ்மியிடமும் என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே? உங்களுக்கு எப்படி ரவீந்தரை பிடித்தது? உங்களுக்கு பொருத்தம் பார்த்தது யார்? இரண்டாவது திருமணம் செய்து கொண்டது நெருடலாக இல்லையா? என அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தேவையில்லாத  பல கேள்விகளை கேட்டார்.



மேலும் இப்படி அநாகரீகமாக கேள்வி கேட்டதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சீக்கிரம் மக்களிடம் அடி வாங்குவார். அவரே தனது முகத்தை மறைத்துக்கொள்ளும் அளவுக்கு விரைவில் அசிங்கப்படுவார் என கடுமையாக சாடியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். முக்தர் அகமதின் கேள்விகளுக்கு நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement