• Apr 20 2024

வீட்டு வாடகைக்குப் பதில் படுக்கைக்கு வர சொல்லி அழைத்த நபர்... உடனே பிரபல நடிகை செய்த செயல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மராத்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை தேஜஸ்வினி பண்டிட். இவர் தனது அசத்தலான நடிப்புக்காக ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது இவர் 'அதங்' என்ற வெப்தொடரிலும் நடித்திருக்கிறார். அந்த தொடரில் சிறப்பாக நடித்து ரசிகர்களை தன்னை பற்றி பேச வைத்திருக்கிறார்.

சினிமாவைப் பொறுத்தவரை பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தேஜஸ்வினி பண்டிட் தெரிவித்த விஷயம் பல பெண்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.


அதாவது அப்பேட்டியில் அவர் கூறுகையில், "இந்த சம்பவம் ஆனது 2009-10 ஆம் ஆண்டு சமயத்தில் நடந்தது. அப்பொழுது என்னுடைய இரண்டு படங்கள் தான் ரிலீஸாகியிருந்தன. நான் புனேவில் இருக்கும் சின்ஹாகாத் சாலையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தேன். அந்த அபார்ட்மென்ட் ஒரு கவுன்சிலருக்கு சொந்தமானது. 

இதனால் வாடகை கொடுக்க அவரின் அலுவலகத்திற்கு சென்றேன். அவரோ படுக்கைக்கு அழைத்து ஆஃபர் கொடுத்தார். அவர் மேஜையில் ஒரு கிளாஸில் தண்ணீர் இருந்தது. அதை எடுத்து உடனே அவரின் முகத்தில் ஊற்றிவிட்டு கிளம்பிச் சென்றேன் என்றார்.


இதுதொடர்பாக தேஜஸ்வினி மேலும் கூறுகையில் "நான் இது போன்ற விஷயங்களை செய்ய சினிமா துறைக்கு வரவில்லை. அப்படி செய்தால் நான் ஏன் வாடகை வீட்டில் தங்கப் போகிறேன். பங்களா, கார்கள் என சொகுசாக வாழ மாட்டேனா?. இரண்டு விஷயங்களை வைத்து அந்த நபர் என்னை அப்படி நினைத்திருக்கிறார். ஒன்று என் தொழில். இரண்டு என் நிதி நிலைமை அப்பொழுது சரியில்லை. அந்த அனுபவம் மூலம் நான் நிறையப் பாடம் கற்றுக்கொண்டேன்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, "வாடகைக்கு பதில் படுக்கைக்கு வா என்று அழைத்த அந்த கவுன்சிலர் யார் என்று தேஜஸ்வினி தெரிவிக்க வேண்டும். இது போன்ற ஆட்களின் பெயரை தெரிவித்தால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். ஒரு பெண் தனியாக தங்கியிருந்தால் இப்படியா பேசுவது" என்று அவரின் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த கவுன்சிலரின் பெயரை தேஜஸ்வினி இதுவரை தெரிவிக்கவில்லை.


இதுபோல் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் அதிகம் இருக்கிறது என்று பல பிரபல நடிகைகளே தெரிவித்துள்ளனர். அதில் சிலரோ, தங்களை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை தெரிவித்தனர். இந்நிலையில் தேஜஸ்வினிக்கு வேறு மாதிரி, அதுவும் குறிப்பாக இப்படி ஒரு தொல்லை நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement