• Apr 18 2024

கமல் மீது உச்சகட்ட கோபத்தில் முக்கிய பிரபலம்..இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் கமல் மற்றும் மணிரத்னம் மீது வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை தானே தயாரித்து நடித்திருந்தார் கமல். அனிருத்தின் இசையில் கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. மேலும் இப்படத்தின் வெற்றி கமலுக்கு புதுஉத்வேகத்தை தர அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் கமல்

அத்தோடு கமல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர்  தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. 

இருப்பினும் பல பிரச்சனைகளின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.எனினும்  இதையடுத்து இப்படம் கைவிடப்பட்டதென தகவல்கள் பரவ துவங்கின. இவ்வாறுஇருக்கையில்  கமல் தன் முயற்சிகளினால் இப்படத்தை தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது

இந்தியன் 2 படத்தை அடுத்து கமல் வினோத் இயக்கத்தில் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. எனினும் இதற்கு முன்பாகவே கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் கமல் 234 படம் உருவாகப்போவதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ஆனால் இன்னமும் இப்படத்தின் கதை முடிவாகவில்லை என்ற தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அத்தோடு கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்தது. 

இவ்வாறுஇருக்கையில்  தற்போது லைக்காவின் நிறுவனர் சுபாஷ்கரன் கமல் மற்றும் மணிரத்னம் மீது வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஏனென்றால் கமல் மற்றும் மணிரத்னம் இணையும் படத்தை லைக்கவிடம் சொல்லியிருந்தால் அவர்களே தயாரித்திருப்பார்களாம். ஆனால் இதைப்பற்றி லைக்கவிடம் எந்த ஒரு தகவலும் சொல்லாமல் இவர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து உருவாக்கவுள்ளது சுபாஷ்கரனை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.எனினும்  அதன் காரணமாகத்தான் கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் சுபாஷ்கரன் கலந்துகொள்ளவில்லை என்றும் பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement