• Apr 19 2024

35 வருடங்களுக்கு பின் கமலுடன் இணையும் முன்னணி இயக்குநர்..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் மற்றும் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பின்னர்  மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நான்கு வருடங்களுக்கு பின்னர்  விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற விக்ரம் திரைப்படத்தால் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார் கமல். இதையடுத்து தற்போது கமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்ப்பட்ட இப்படம் பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. இதன் பின்பு உலகநாயகன் கமல் முயற்சியால் தற்போது மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பிக்ப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அடுத்ததாக கமல் இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிப்பதாக பேசப்பட்டது.

ஆனால் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிக்கப்போவது உறுதியாகியுள்ளது. இதன் அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் நாயகன் படத்திற்க்கு பின்னர் கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் 35 வருடங்களுக்கு பிறகு இந்த படத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.



Advertisement

Advertisement

Advertisement