தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். இப்படம் இவருடைய ரி என்ரியின் சிறந்த அடையாளமாக உள்ளது. இதனால் இவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இப்படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து நடந்து வருகிறது. ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து நடந்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கி வரும் பத்து தல என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வருகின்றார்.
கேங்ஸ்டர் ரோலில் சிம்புவும், அவரை பிடிக்க போராடும் போலீசாக கெளதம் கார்த்திக்கும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிம்பு நடிக்க வேண்டிய பகுதிகள் மட்டும் தான் மீதம் உள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகைகள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 45 நாட்கள் வரை நடத்தப்பட உள்ளதாம். ஆகஸ்ட் மாதத்தில் பத்துதல படத்தின் ஷுட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அத்தோடு இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
பிற செய்திகள்
- தந்தையின் படத்திலேயே நடிகராக அறிமுகமாகும் செந்திலின் மகன்- படப்பிடிப்பிலிருந்து லீக்கான போட்டோஸ்
- நாகசைத்தன்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன் மற்றும் ராணா- அதிரடியாக வெளியாகிய புதிய படத்தின் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!