• Apr 17 2024

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீசன் 2 சீரியலில் செய்யப்பட்ட புதிய மாற்றம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம். இந்த சீரியல் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அதாவது சத்யா தன்னுடைய அப்பா கார்த்திக் கிருஷ்ணா தான் என்ற உண்மையை எல்லோரிடமும் வெளிப்படையாகக் கூறி விட்டார். இதனால் மனோகர் குடும்பத்திற்கு மட்டுமல்லாது காதாம்பரிக்கும் அனைத்து விடங்களும் தெரிந்து விடுகின்றது.

அத்தோடு மல்லிகாவின் அண்ணாவும் அண்ணியும் புதிதாக என்ரி கொடுத்துள்ளனர். சத்யாவோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக வருண் சத்தியா வீட்டிற்கே சென்று விட்டார்.

இருப்பினும் சீலா சத்தியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதால் பெரிய பிரச்சினை நடந்து வருகின்றது. அடுத்து என்ன எல்லாம் நடக்கப் போகுதோ என்று அனைவரும் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இந்த சீரியல் வழமையாக மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது 6.30 க்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement