• Apr 24 2024

ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது கடைசியா ரச்சிதா செய்த செயல்..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம்  ராபர்ட் மாஸ்டர் ர்பார்த்ததை போலவே வெளியேறி விட்டார்.ராம் ராமசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் ஒருவேளை வெளியேறி விடுவார்களோ என்கிற ரேஞ்சில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றது ரொம்பவே அருமை.அத்தோடு ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது ரச்சிதா பண்ண அந்த ஒரு விஷயத்தை கேமரா ஃபுல் ஃபோகஸாக ஜூம் செய்து பார்த்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்று தான் கூற வேண்டும்.

பிக் பாஸ் வீட்டில் முதல் போனியாக டான்ஸர் சாந்தி வெளியேறிய நிலையில், வயதானவர்களை டார்கெட் பண்றாங்க அடுத்து ராபர்ட் மாஸ்டர் தான் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. ஆனால், ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களை கடந்து பாதி கிணறு தாண்டிய நிலையில் தான் எவிக்‌ஷனிற்கு சென்றார்.

அப்பா பாசம் நினைவில் வந்து விட்டது. இந்த வாரம் நான் வெளியேறுகிறேன் என ஆடியன்ஸிடமே ராபர்ட் மாஸ்டர் கூறிய  நிலையில், அவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகி உள்ளார். ரச்சிதா உடன் ரொமான்ஸ் செய்து வந்த நிலையில், அந்த பெயருடன் போகக் கூடாது என்பதற்காக அப்பா - மகள் டிராமாவுடன் ராபர்ட் வெளியேற்றப்பட்டு இருக்கிறாரென நெட்டிசன்கள் வில்லங்க ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

அத்தோடு ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ராஜா ராணியாக இருந்த பயண வீடியோவை காட்டும் போதே ராபர்ட் மாஸ்டருக்கு உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. இந்த அளவுக்கு நாம உள்ள என்ஜாய் பண்ணிருக்கோமா என நினைத்த அவர் கமலுக்கு நன்றி கூறி விட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.



ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது ரச்சிதா எப்படி அழப் போகிறார் பாருங்களே என நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த நிலையில், கடைசி வரை ஒரு சொட்டு கண்ணீர் கூட ரச்சிதா விடவில்லை. அத்தோடு எல்லதாரையும் கட்டிப்பிடித்து விடைபெறுகின்றேன் என்று கூறும் போது ரச்சிதா மட்டும் கடைசியில் இருந்து விட்டு கைகுலுக்கி அனுப்பி வைத்தார்.இந்த  காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.


அத்தோடு ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய பின்னர் முதல் நபராக வந்து சோபாவில் சைலன்ட்டாக அமர்ந்த ரச்சிதா அழுகிறாரா என்பதை பார்க்க பிக் பாஸ் கேமராக்கள் அவர் முகத்தை எக்ஸ்ட்ரீம் ஜூம் செய்து பார்த்தன. அப்போதும் அவர் முகத்தில் எந்தவொரு ரியாக்‌ஷனோ, கண்ணீரோ வராதது தெரிந்து அப்படியே பின் வாங்கி விட்டன.

Advertisement

Advertisement

Advertisement