• Apr 19 2024

நாமினேஷனில் சிக்காமல் நழுவிவந்த 3 பேரை கொத்தாக தட்டிதூக்கிய ஹவுஸ்மேட்ஸ்!- 36ம் நாளில் நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

 அந்த வகையில் 36ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அதாவது முதலில் தனலக்ஷ்மி தனக்கு திருட்டுப் பட்டம் கட்டிட்டாங்க. நான் திருடி இல்லை என்று பிக்பாஸிடம் சொல்லி அழுததால் பிக்பாஸ் தனலக்ஷ்மியைக் கூப்பிட்டு பேசுகின்றார். இது ஒரு தவறே தவிர அப்படி ஒரு பட்டமும் உங்களுக்கு வராது ஒழுங்காகப் போய் விளையாடுங்க என்று கூறுகின்றார்.


இதனை அடுத்து தஇந்த வாரத் தலைவருக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் விக்ரமன் அமுதவாணன் ரச்சிதா மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மணிகண்டன் வெற்றி பெற்று இந்த வாரத் தலைவர் ஆனார். தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது.

அதன்படி ராபர்ட் மாஸ்டர், ஜனனி, நிவாஷினி, தனலட்சுமி, அசீம், ஆயிஷா ஆகியோரது பெயர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.இதனை அடுத்து ராபேட் மாஸ்டர் கமெரா முன்னாடி சென்று இந்த நரிக் கூட்டத்தோட வாழுறதுக்கு வெளிய வந்து வாழலாம். இத வந்து மக்களுக்கு சொல்றேன். இவங்க வேணாம்ன்னு சொல்லி வெளிய அனுப்புறாங்க. நமக்கு வெளிய நிறைய வேலை இருக்கு. தயவு செஞ்சு காப்பாத்திடாதீங்க. லவ் யூ" என கூறினார்.


இது தவிர ரச்சிதாவிடம் வந்து என்னை யாருமே சாப்பிட்டியா என்று கேட்கல நீயாவது என்னைக் கேட்டிருக்கலாம் தானே என்று புலம்புகின்றார். இதன் பின்னர் ஜனனியும் அமுதவாணணும் பேசிட்டு இருக்கின்றார்கள். அதற்கு அமுதவாணன் நாம சேர்ந்திருக்கிறதால உன்னுடைய கேமை நான் விளையாட விடுகின்றேன் இல்லை என மற்றவங்களுக்கு தோணுது இனிமேல் நாம விலகி இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.


இதனைப் பார்த்த ஜனனி உடனே "நீ என்னைப்  பகடைக்காயாய் use பண்ண நான் என்ன பக்கோடாவா" நினைக்கிறவங்க நினைக்கட்டும் நாம எதற்கு பேசாமல் இருக்கணும் என்று கூறுகின்றார்.தொடர்ந்து மைனா நந்தினி தன்னுடைய பொருட்களைக் காணவில்லை குறிப்பாக செருப்பை காணவில்லை யார் எடுத்தாங்க என்று தெரியல என்று எல்லார் கிட்டையும் பேசிட்டு இருந்தாங்க.இவ்வாறாக ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தரும் பேசிட்டு இருந்தனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது. 


Advertisement

Advertisement

Advertisement