• Mar 29 2024

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கில்லி பட நடிகர்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!

டெல்லியில் பிறந்த ஆஷிஷ் வித்யார்த்தி பாலிவுட்டில் சர்தார் படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் ரிலீஸாக தாமதமானதால் த்ரோகால் என்ற படம் அவரது முதல் படமாக கருதப்படுகிறது. முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார் ஆஷிஷ். அதன் பிறகு தொடர்ந்து ஹிந்தி,தெலுங்கும், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார்.

பிற மொழிகளில் நடித்து வெகு பிரபலமாகியிருந்த சூழலில் தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அறிமுகமான முதல் தமிழ் படமே கமர்ஷியல் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி ஆஷிஷ் வித்யார்த்தியின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கவர தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 


2002ஆம் ஆண்டு ஆஷிஷ் வித்யார்த்திக்கு தமிழில் சிறப்பான ஆண்டாக அமைந்தது. ரஜினி நடித்த பாபா படத்தில் அவர் ஏற்றிருந்த இப்போ ராமசாமி என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனையடுத்து, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் ஆகிய படங்கள் என மொத்தம் அந்த வருடத்தில் மட்டும் ஐந்து தமிழ் படங்களில் நடித்தார். 

அதுமட்டுமின்றி பிற மொழிகளிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார்.தமிழில் அவரை பரவலாக அடையாளப்படுத்தியது கில்லி படம். தரணி இயக்கி விஜய் நடித்து மெகா ஹிட்டான படம்தான் கில்லி. அதில் விஜய்க்கு தந்தையாக காவல் துறை அதிகாரியாக கலக்கியிருப்பார். குறிப்பாக விஜய்யின் நண்பர்கள் குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி பேசும் காட்சி இன்றுவரை சமூக வலைதளங்களில் மீம் மெட்டீரியலாக சுற்றிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 


தொடர்ந்து ஆறு, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்த அவர் கடைசியாக தமிழில் என் வழி தனி வழி படத்தில் நடித்திருந்தார்.ஆஷிஷ் வித்யார்த்தி பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை திருமணம் செய்துகொண்டார். அவர் நடிகை, பாடகி, நாடக கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சில காலம் சிங்கிளாக இருந்தார் ஆஷிஷ் வித்யார்த்தி.

 இந்நிலையில் 60 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் அதில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. மேலும், அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement