• Apr 20 2024

பணப்பையுடன் வெளியே வந்த விஜே கதிரவனுக்கு கிடைத்த ஸ்பெஷல் விருந்து..அதுவும் யாருடைய கையால் தெரியுமா...?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6வது சீசனில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில்தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இதில்  ரசிகைகளின் சாக்லெட் பாயாக இருந்தவர் தான் தொகுப்பாளர் கதிரவன். பிக்பாஸில் நுழைந்ததில் இருந்து சில வாரங்கள் அவர் இருக்கிறாரா என்பதே தெரியாமல் இருந்தது.

100 நாட்களுக்கு நடுவில் தான் விளையாடவே இவர் ஆரம்பித்தார். எல்லா போட்டிகளிலும் தரமாக விளையாடி மக்கள் பார்வைக்கு தனியாக தெரிந்தார்.அத்தோடு கடுமையான போட்டியாளர்களுக்கு நடுவில் நன்கு போட்டிபோட்டு இப்போது 100 நாட்கள் வரை வீட்டில் இருந்துவிட்டார்.



100 நாட்கள் வீட்டில் இருந்த கதிரவன் திடீரென 3 லட்சத்திற்கு பிக்பாஸ் வைத்த பணப்பெட்டியை எடுத்து வெளியே வந்துவிட்டார். மேலும் இப்படி அவர் செய்திருக்க கூடாது என்றும் இதுதான் சரியான முடிவும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அவர் முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது..“எனது பிபி பயணம் முழுவதும் நீங்கள் அளித்து வரும் அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அத்தோடு பெரிய வீட்டில்இருந்து விட்டு இந்த வீட்டிற்கு வந்ததும் சின்னதா தெரியுது....அது ஒரு மிகச்சிறந்த பயணம்..நான் பெருமை கொள்கின்றேன் என்றென்றும் நன்றியுடனும் ஆசீர்வாதத்துடனும்!மேலும் அன்புடனும் பொழுதுபோக்குடனும் உங்களிடம் மீண்டும் வருகிறேன்..என தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் 100 நாட்களுக்கு பின் அவருடைய அம்மா கையாலே சாப்பாடு சாப்பிட்டதை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவேற்றி உள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement