• Apr 20 2024

'தி லெஜண்ட்' இறுதி வசூல் இவ்வளவா..? விமர்சனத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்… வாழ்த்தும் ரசிகர் கூட்டம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவருராகவும், 'சரவணா ஸ்டோரின் உரிமையாளராகவும் இருப்பவரே நடிகர் சரவணன் அருள். இவர் தமிழ் சினிமாவில் சமீபத்தில் தான் நடிகராக அறிமுகமாகியிருந்தார். அதாவது ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் தான் 'தி லெஜண்ட்'.

இந்தப் படமானது கடந்த ஜூலை 28-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மேலும் இப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. அத்தோடு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளதோடு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படமானது உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 600 இற்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

அத்தோடு ரூ.45 கோடி செலவில் உருவான 'தி லெஜண்ட்' என்ற இந்தப் படமானது உலக அளவில் முதல் வார முடிவில் ரூ.6 கோடி ரூபாய் வசூலித்தது. அதுமட்டுமன்றி படத்தின் முதல் நாள் வசூல் ஆனது ரூ.2 கோடியை கடந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது மக்கள் மத்தியில் பல கலவையான விமர்சனங்களில் பெற்று வந்த இந்தப் படமானது ஓரளவிற்கு நல்ல வசூலையே கொடுத்துள்ளது. அதிலும் சரவணன் அருள் நடித்த முதல் படத்திலேயே ரூ 12.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

மேலும் இதை அறிந்த ரசிகர்கள் பலரும் சரவணன் அருளுக்கு தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு ரசிகர் "மேலும் மேலும் பல படங்களில் சோர்ந்து விடாமல் நடித்து உங்கள் திறமையை வெளிக் கொண்டு வாருங்கள்" என கூறியிருக்கின்றமை பாராட்டுக்குரிய விடயமாக பலராலும் பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement