• Apr 20 2024

பிரபல நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்.. சோகத்தில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சரவணன், கார்த்தி ஆகியோரின் நடிப்பில் உருவான படமே 'பருத்தி வீரன்'. இவர்களுடன் இணைந்து இப்படத்தில் ஒத்தக்கடை ஆறுமுகம் என்பவரும் நடித்திருந்தார். இந்நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதுகுறித்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.


பருத்திவீரன் படத்தில் எமோஷலான பல காட்சிகள் இடம்பெற்றிருப்பினும் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கின்றது. அந்தவகையில் அப்படத்தில் டீக்கடைக்காரனாக நடித்துப் பிரபலமானவர் தான் நடிகர் ஒத்தைக்கடை ஆறுமுகம்.

மேலும் இவர் தாமிரபரணி, சீம ராஜா, ரஜினி முருகன் எனப் பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இந்நிலையில் இவர் தற்போது பட வாய்ப்புக்கள் இல்லாமல்  தவித்து வருகின்றார். இவரது மனைவி 100 நாள் வேலைக்கு போய்ட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் சாப்பிட்டு வருவதாகவும் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.


மேலும் இது குறித்து அவர் தெரிவித்து இருக்கையில் "எனக்கு 2வாரங்களுக்கு முதல் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு அப்புறமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்க டெஸ்ட் பண்ணி பார்த்ததில் எனக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறி இருந்தார்கள். ஆனால் என்னிடம் கையில் பணம் எதுவும் கிடையாது. அதனால் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டேன்" எனக் கூறியிருந்தார்.

இவ்வாறு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கின்ற இவருக்கு தமிழக அரசு உதவி பண்ண வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார். அத்தோடு நடிகர் சங்கத்தில் தான் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர்கள் நிதி உதவி செய்வதாக கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இவரின் உடல்நிலை குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும் இவருடன் இணைந்து நடித்து பல நடிகர்கள் இவருக்கு உதவ முன் வந்துள்ளார்கள். அந்தவகையில் கார்த்தி, சரவணன் உட்படப் பலரும் இவருக்கு மருத்துவ உதவி பண்ண ரெடியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் ஒத்தக்கடை ஆறுமுகம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளமையும், பணம் இல்லாமல் திரும்பி வந்தமையும் குறித்த இந்த செய்தி ஆனது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement