• Apr 25 2024

பல லட்சம் ரூபாயுடன்... பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்றைய தினம் வெளியேறிய பெண் போட்டியாளர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. குறிப்பாக 35 நாட்களை கடந்து விட்ட இந்த சீசனானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.


அத்தோடு இந்நிகழ்ச்சியானது எப்போதும் போலவே இப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும், சண்டைகளும் தான்.

21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்த நிகழ்வில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அந்தவகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 


இதில் இந்த வாரம் ராம் அல்லது மஹேஸ்வரி தான் வெளியேறுவார்கள் என்று மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹேஸ்வரி குறைந்து வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதாவது ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மஹேஸ்வரி ஒரு நாளைக்கு ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறார் என எற்கனவே சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருந்தது.


இந்நிலையில், 35 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த மஹேஸ்வரி இன்றைய தினம் சுமார் ரூ. 8 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement