இந்திய சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகள் கொண்ட ஒருவராக விளங்குபவர் அருண்ராஜா காமராஜ். இவர் 'தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்லாது 'கபாலி' திரைப்படத்திற்காக இவர் எழுதிய 'நெருப்புடா..' பாடல் ரசிகர்களிடம் இருந்து பெரியளவில் வரவேற்பை பெற்றது. அத்தோடு 'ராஜா ராணி' என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமானார். அத்தோடு 'மான் கராத்தே' படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனங்களிலும் நீங்காத ஒரு இடத்தைப் பெற்றார்.
இவ்வாறாக பல வழிகளிலும் தனது திறமையை வளர்த்து வந்த இவரின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது அவரின் மனைவியின் இறப்புத் தான். அதாவது கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி பல உயிர்களை காவு வாங்கியது அதில், அருண்ராஜா காமராஜின் மனைவியும் ஒருவர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவரின் மனைவியாகிய சிந்துஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவி மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 28ந் தேதி இவர் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அருண்ராஜா காமராஜ் விரைவில் வெளியிடுவார் என்றும் தகவல் கசிந்துள்ளது. அவர் திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Listen News!