• Apr 19 2024

சொத்தை காப்பாற்ற வெளியில் வராத பிரபல நடிகை... வீட்டுக்குள் முடங்கி போன மர்மம் என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகளான கனகா, ராமராஜன் நடிப்பில் வெளியான கரக்காட்டகாரன் படத்தின் மூலம்  ரசிகர்களிடத்தே பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

எனினும் சமீபத்தில் அவருக்கு என்ன ஆனது என்ன செய்கிறார் என்ற கேள்விகள் ரசிகர்களிடத்தே  எழுந்தது. இதற்கு தன் தாயார் விட்டுச்சென்ற சொத்தினை காப்பதற்காக வெளியில் கூட தலைக்காட்டாமல் வீட்டிலேயே முடங்கிடந்து வந்துள்ளார்.


இதுவரை திருமணம் செய்து கொள்ளாத கனகா 49 வயது ஆகியும் தனிமையில் இருந்து வருகிறார். இவ்வாறுஇருக்கையில்  சில வாரங்களுக்கு முன் கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு கால் செய்து வரவழைத்துள்ளனர். உடனே வந்த தீயணைப்பு அதிகாரிகளை வீட்டிற்குள் விடாமல் கதவை பூட்டி இருக்கிறார்.


உடனே அதிகாரிகளை கதவை திறந்து கனகாவை தனியறையில் அடைத்து தீயை அணைத்திருக்கிறார்கள். அத்தோடு பெரிய சேதாரம் இல்லாமல் கனகாவை தீயணைப்பு துறையினர் காப்பாற்றிவிட்டுள்ளனர். சொத்து எங்கே பரிபோகும் என்ற பயத்தில் நடிகை கனகா இப்படி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement