• Apr 20 2024

நடுரோட்டில் சண்டையிட்ட நடிகை... போலீஸ் விசாரணையில் தெரிய வந்த உண்மை..

ammu / 1 year ago

Advertisement

Listen News!

யாராவது காப்பாத்துங்க, இவன் என்கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணுகிறான் என்று துணை நடிகை ஒருவர் நடுரோட்டில், முகத்தில் காயங்களுடன் கூச்சலிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


இது மதுரையில் நேரு நகர் பிரதான சாலையில் இடம்பெற்று உள்ளது. இங்கு வந்த இளம் ஜோடி சொகுசு காரிற்குள் இருந்தபடி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அவர்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டு அடித்துக்கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் அவதானித்து கொண்டனர்.


ஆரம்பத்தில் தனிப்பட்ட விவகாரம் என்று இருந்து விட்டனர். பின்னர் அடிதடியும், சத்தமும் அதிகமாக கார் கதவை திறக்க சொல்லி என்ன பிரச்சனை என்று மக்கள் மதுரை தமிழில் கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண் ஒரு துணை நடிகை என்றும் அந்த பையன் ஒரு வழக்கறிஞர் என்றும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.


எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு போய் பேசிக்கொள்ளுங்கள், இது பொது இடம் என்று மக்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்த ஜோடி மாறி மாறி புகார் மழையை பொழிந்துள்ளனர். இது பெரிய பிரச்சனையா இருக்கும்போல என்று எஸ்.எஸ்.காலனி போலீசில் முறையிட்டுள்ளனர்.


போலீஸ் வந்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து உள்ளனர். அப்போது உத்தரப்பிரதேசம் வாரணாசி பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியாரின் மகள் அங்கிதா பட்டாச்சாரி தான் இந்த பெண் என்றும், உடன் இருந்தவர் பீகார் வெஸ்ட் நகரை சேர்ந்த மனோஜ் பாண்டியனின் மகன் நிதிஷ் குமார் என்றும் தெரிய வந்துள்ளது.


இருவரும் ஈஷாவிற்கு வந்துள்ளனர். பின்னர் கோவையில் வாடகை கார் எடுத்து தமிழ் நாட்டின் பல இடங்களை சுற்றி பார்க்க திட்டமிட்டுள்ளனர். மேலும் நங்கள் இருவரும் நண்பர்கள், தனது ஆண் நண்பன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றான், அதுமட்டுமல்லாமல் என்னுடைய பணத்தையும் எடுத்து விட்டான் என்று அந்த பெண் கூறியுள்ளார். 


பதிலுக்கு அந்த பையன், இந்த பெண் ஒரு தவறான பெண் என்று கூறியுள்ளான். இருவரையும் விசாரித்த போலீஸ் பூமிநாதன் உடனடியாக இருவரும் ஊரிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். நடு ரோட்டில் சத்தமிட்ட துணை நடிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement