• Apr 20 2024

அந்த நேரத்தில் விலகிய ஆடை..சில்க் ஸ்மிதா சொன்ன வார்த்தை..காலம் கடந்து உண்மையை உடைத்த நடிகை

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

திரையுலகில்  தன்னுடைய கண் அசைவாலே பலருடைய மனதை பறித்து கொண்டவர் தான் சிலுக் ஸ்மிதா, அவர் மறைந்து வருடங்கள் பல ஆனாலும் பலருடைய மனதில் இப்பவும் அவருடைய பொன் சிரிப்பும், அந்த காந்தக்கண் பார்வையும் டக்கென்று நினைவிற்கு வந்துவிடும்.

அத்தகைய வசீகரம் மிக்க சில்க் ஸ்மிதா தமிழில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகம் ஆகியிருக்கிறார். அதற்கு பின்னர்  இவர் தமிழில் கவர்ச்சி கன்னியாக கொடிகட்டி பறந்து தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அத்தோடு தன்னுடைய கட்டழகாலும், காந்த கண்களாலும், வசீகரிக்கும் பேச்சாலும் பலருடைய கனவு கன்னியாக இப்ப வரைக்கும் பலருடைய நினைவுகளில் வாழும் சில்க் ஸ்மிதா ஒரு காலகட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருந்த அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தினாலே இளைஞர்கள் கூட்டம் அத்த திரைப்படத்திற்கு முந்தி அடித்திருக்கிறது.

என்னதான் இவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் கிளம்பி கொண்டு இருந்தாலும் அவரைப் பற்றி பேட்டி கொடுக்கும் அவரோடு நடித்த நடிகர் எல்லோரும் அவரை பாராட்டி தான் உள்ளார்கள். அந்த வகையில் நடிகை சுலக்ஷனா சில்க் ஸ்மிதா பற்றி சில விஷயங்களை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் சில்க் பழகுவதற்கு ஒரு குழந்தை மாதிரி என்றும் அவரை மாதிரி ட்ரெஸ்ஸிங் யாராலும் அந்த அளவு பயன்படுத்த முடியாதென்றும் சரியான உடல் அமைப்பை கொண்டவர் என்றும் தெரிவித்து இருக்கிறார்.


அதுமட்டுமில்லாமல் அவருடைய ஆடைகளை தேர்வு செய்வதில் யாராலும் அவரைப்போல செய்யவே முடியாது. அவர் படிக்கவில்லை என்றாலும் ட்ரெஸ்ஸிங் சென்சில் மிகவும் கவனமாக இருப்பார் என்று தெரிவித்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் படபிடிப்பு தவிர சூட்டிங் ஸ்பாட்டில் சும்மா ஓய்வாக இருக்கும் நேரத்தில் உடைப்பற்றி கவலைப்பட மாட்டாராம். ஆடைகள் எல்லாம் கலைந்து இருக்குமாம்.அப்போது சுலக்ஷனா மேலே ஒரு டவல் போட்டு உட்காரு என்று சொன்னாராம். அதற்கு சில்க் பரவாயில்லக்கா பார்த்தால் பார்த்துட்டு போகட்டும் என்று சின்ன புள்ள மாதிரி அப்போ சொல்லுவார் என்று சுலோக்ஷனா கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement