• Apr 20 2024

இயக்குநர் என்னை ஏமாத்திட்டான் பிச்சை எடுக்கக் கூட தயங்க மாட்டேன்- வெளிப்படையாக உண்மையைச் சொன்ன விஷால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் தயாராகி வருகிறது.இப்படத்தை இயக்குநர்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகின்றார்.இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தை வினோத் தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இப்படியான ஒரு நிலையில் அண்மையில் இப்படத்தின் ஷுட்டிங் காட்சி நடந்து கொண்டிருக்கும் போது  அங்கு ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தபோது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தில் சிக்கியது. 


அந்த காட்சி படமாக்கப்பட்டபோது 100-க்கும் மேற்பட்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் எந்தவித காயமும் இன்றி தப்பினர். அந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்ட விஷால் இந்தப் படத்தோடு இயக்குநர் எனக்காக 7 வருஷம் எனக்காக காத்திட்டு இருந்தான் என்று பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தினான். இப்படம் கரெக்டான டைம்ல அமைஞ்சிருச்சு அதான் பண்ணிட்டு இருக்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் அம்மா பேர்ல ஏன் அறக்கட்டளை தொடங்கினேன் என்றால் நான் வளர்ந்த சமூகத்திற்கு ஏதாவது கொடுக்கணும் அதானல தான் ரொம்ப கஷ்டப்படுகின்ற பிள்ளைகளின் படிப்பிற்காக இந்த அறக்கட்டளையை நடத்திட்டு வாரேன். என்னுடைய ட்ரீம் ப்ரொஜக்ட் இரண்டு இருக்கு ஒன்று நடிகர் சங்கத்திற்கு நல்ல கட்டிடம் கட்டணும். அடுத்து நான் தத்து எடுத்த கிராமத்தை முன்னேற வைக்கணும் இது ரெண்டும் தான்.


என்னோட அறக்கட்டளையில் படிக்கிற பிள்ளைகளுக்காக நான் என் வேணும் என்றாலும் செய்வேன். பிச்சை எடுக்கக் கூட தயங்கமாட்டேன். அதைப் பண்ணுவேன்.அத்தோடு இன்னும் யாரெல்லாம் படிக்க முடியாமல் இருக்கிறாங்களோ அவங்க எங்களோட அறக்கட்டளை மூலமா தேடி எடுத்து படிக்க வச்சிட்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement