• Apr 19 2024

அமுதவாணனை அடித்து சண்டை போட்ட போட்டியாளர்-பரபரப்பு திருப்பங்களுடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்புடன் நகர்ந்து செல்கின்றது.இந்நிலையில்  புதுபுது டாஸ்கள் கொடுத்து வித்தியாசமாக நகருகின்றது பிக்பாஸ் வீடு.

இவ்வாறுஇருக்கையில்  இந்த வாரத்திற்கான டாஸ்க்காக, பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது.இதில்தான், ‘போக பிஸ்ஸா’ என்னும் விநோதமான ஆட்டம் பிரபலமாகியுள்ளது. மேலும்  இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அத்தோடு அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம் எனக் கூறப்பட்டது.

எனினும்  அப்படி போகும்போது அந்த போட்டியாளர் பிடிபட்டால், அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து எதிரணியினர் தொடாமல் பேசியும் ரியாக்ஷன் பண்ணியும் டார்ச்சர் செய்வார்கள். பதிலுக்கு அந்த பிடிபட்டவர் ரியாக்ட் செய்தால் தோல்வி என அர்த்தம். அப்படியானால் என்ன பண்ண வேண்டும்? மாட்டிக்கொள்ளும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் மன திடகாத்திரத்துடன் எதிரணியினரின் டார்ச்சருக்கு ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை இருந்தால் அவர்களுக்கு, தேவைப்படும் பொருளுடன் வெற்றியுடன் வெளியே செல்லலாம். இறுதியில் எல்லாம் முடிந்த பின் யாரிடம் அதிக கல்  இருக்கிறதோ, அவர்கள் ‘நாமினேஷன் ஃப்ரீ ஜோன்’ உட்பட சில பல சலுகைகள் தருவார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கதிரவனை அமுதவாணன் மறிக்கும் போது திடீரென இடையில் புகுந்த அசீம் நீங்க எப்பிடி பிஸிக்கல் டார்ச்சல் கொடுக்க முடியும் எனக் கூறி சண்டையை பெரிதாக்குகின்றார்.

அடிச்சாய் எல்லோ வா எனக் அமுதவாணன் கூற ..கோபம் அடைந்த அசீம் அவரின் கன்னத்தில் கை வைத்து அடிச்சா எல்லோ வா என்று கத்துகின்றார்.எதுக்கு கை வச்சாய் இப்போ என அமுதவாணன் கேட்க...அடிடா..அடிடா எனக் கத்துகின்றார் அசீம்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...







Advertisement

Advertisement

Advertisement