• Apr 20 2024

கேப்டன் யாருக்குமே பயப்பிட மாட்டேன்.. எலும்பும் தோலுமாக இருந்த விஜயகாந்த் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் கூட நடந்த சிகிச்சை ஒன்றில் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. கம்பீரமாக திரையில் நடந்து வந்த விஜயகாந்தை இந்த நிலையில் பார்த்துப் பலரும் கண்கலங்கி இருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வரும் விஜயகாந்த் ஊடகங்களுக்கு பல பேட்டிகளையும் கொடுத்து வருகின்றார். அதில் அவர் சற்று சிரமப்பட்டே பேசுகின்றார். அதாவது "கேப்டன் எப்பவுமே பயப்பிட மாட்டேன் என்றார். 


மேலும் விஜயகாந்தின் அலுவலகத்திற்கும் சரி, வீட்டிற்கும் சரி ஞாயிற்றுக்கிழமையில் வந்தால் குறைந்தது 100 பேர் ஆவது சாப்பிடாமல் கிளம்ப மாட்டாங்க. அவர்கள் எல்லோருக்குமே சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவார். அந்தளவிற்கு ஒரு சிறந்த மனிதன் தான் விஜயகாந்த். இதனை எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட கூறுகின்றனர் எனவும் அப்பேட்டியில் கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது பிற நடிகர்களை போல நிஜத்தில் கேப்டன் இற்கு நடிக்கத் தெரியாது. நிஜத்திலும் சரி, சினிமாவிலும் சரி ஒரு நல்ல மனசு கொண்ட வெள்ளந்தியான மனிதன் தான் விஜயகாந்த். அந்த நற்பெயருக்கு இன்றுவரை களங்கம் ஏற்படவில்லை. தே.மு.தி.க. வில் இருந்து விலகிய நிறைய பேர் இருக்காங்க. ஆனால் விலகிய எல்லோருமே உங்களை நல்ல விதமாக தான் சொல்லியிருக்காங்க எனவும் அவரைப் புகழ்ந்து பேசப்படுகின்றது.


மேலும் இருப்பினும் ஒரு சிலர் உங்க கட்சியில் இருந்து தொடர்ந்து விலகிய வண்ணம் தான் இருக்கின்றனர். அதற்கு காரணம் என்ன எனக் கேட்ட கேள்விக்கு விஜயகாந்த் போறவங்க எல்லோரும் ஒவ்வொரு குறையை சொல்லிட்டுப் போறாங்க என்றார்.

எது எவ்வாறாயினும் விஜயகாந்த் சற்று சிரமப்பட்டுப் பேசுவது ரசிகர்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement