• Apr 20 2024

எனக்கு விஜய்யிடம் பிடித்த விஷயமே அதுதான்..அவரின் தாயார் பகிர்ந்த தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யிடம் தனக்கு பிடித்த விஷயம் பற்றி பேசிய  அவரது தாயார் ஷோபா சந்திரசேகர்

தமிழ் திரையுலகில்  தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய். பல போராட்டங்களை கடந்து பல கடுமையான விமர்சனங்களை சந்தித்து இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு ஹீரோவாக திகழ்கின்றார் விஜய்.

அத்தோடு தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் புது புது வசூல் சாதனை செய்து வரும் விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

வம்சியின் இயக்கத்தில் ராஷ்மிகா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தமன் இசையமைத்துள்ளார். அத்தோடு முற்றிலும் புதுமையான கூட்டணியுடன் விஜய் இப்படத்தின் மூலம் களமிறங்குவதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

மேலும் இதை தவிர இப்படங்களிலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெறவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

இதில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி, ரசிகர்களிடம் அவர் காட்டிய அன்பு என அனைத்து விஷயங்களும் ஹைலைட்டாக அமைந்தன. எனினும் இதைத்தொடர்ந்து தற்போது விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசியது, விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் தமிழ் உச்சரிப்பு தான். குறிப்பாக அவர் பாடல்களில் அவர் தமிழ் உச்சரிக்கும் விதம் எனக்கும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அவர் சமீபத்தில் பாடிய ரஞ்சிதமே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும் என அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement