• Apr 20 2024

பிரகாஷ் ராஜ் செய்த அந்த விஷயம்… இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பிரபலமா..? பாராட்டுத் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபலமான கன்னட நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவரே நடிகர் புனீத் ராஜ்குமார். இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளதோடு பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அந்த வகையில் 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக தனது நடிப்பினால் பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு வந்த கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் திகதி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவரின் இந்தத் திடீர் மரணமானது ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இவருக்கு கன்னடப் பிரபலங்கள் மட்டுமன்றி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டோரும் நேரில் சென்று இரங்கலினை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் மறைந்த புனீத் ராஜ்குமார் நினைவாக செய்துள்ள ஒரு விஷயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

அதாவது நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது புனீத் ராஜ்குமார் நினைவாக ஒரு ஆம்புலன்ஸ் ஐ தானமாக கொடுத்துள்ளாராம். அதுமட்டுமன்றி அந்த அம்புலன்ஸ்க்கு 'அப்பு எக்ஸ்பிரஸ்' எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வாகனம் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது. இவரின் இந்த நல்லெண்ணத்தை பாராட்டி பலரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement