• Apr 20 2024

அந்த கொடுமை எனக்கே நடந்துள்ளது: கொதித்தெழுந்த தமன்னா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் ,தெலுங்கு, இந்தி  என பல படங்களில் போட்டி போட்டு நடித்து வருபவர் தான் தமன்னா.இவ்வாறுஇருக்கையில் பேட்டியொன்றில் தமன்னா தெரிவித்த விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அதில் தனன்னா கூறியதாவது.....

பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் திரையுலகில் உள்ளது. இது நான் நடிக்க வந்த புதிதில் மட்டும் அல்ல தற்போதும் கூட இடம்பெறுகிறது. நான் ஒரு மனுஷி. இது ஆண்களின் உலகம் அதில் நான் ஒரு பெண் என நினைவூட்டிக் கொள்ள விரும்பவில்லை. நான் ஒரு மனுஷி.

இப்படியொரு பிரச்சனை உள்ளது என்பதை எதிர்கொள்வது தான் சிறந்தது. மேலும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் அடுத்த தலைமுறை, குழந்தைகளுக்கு பெண்களை விட ஆண்கள் பெரியவர்கள் என்கிற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும்.அத்தோடு பெண்களை விட ஆண்கள் தான் பெரிய ஆட்கள் என நினைப்பது கூலான விஷயம் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது கூல் கிடையாது என்று நாம் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.


நான் பல படங்களில் நடித்துவிட்டேன் ஆனால் இன்னும் ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதாக  உள்ளது. ஆணின் கருத்தை மதிப்பது போன்று பெண்ணின் கருத்தை மதிப்பது இல்லை. அதனால் இது தான் என் கருத்து என நான் வலியுறுத்த வேண்டியாக உள்ளது. அதுவே ஒரு ஆணாக இருந்தால் அவரின் கருத்தை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள்.

பள்ளியில் படித்தபோது நான் நடிகையாக விரும்புகிறேன் என்று கூறியதை கேட்டு பலரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். நம் நிதி நிலைமையை கேள்வி கேட்பார்கள். பெற்றோர் என்ன நினைப்பார்கள் என்றார்கள். இப்போ நடிகையாக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள்.

ஒரு பெண்ணாக இப்படி தான் நடக்க வேண்டுமென சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள். ஆனால் என் பெற்றோர் என்னை புரிந்து கொண்டு ஊக்குவித்து வருகிறார்கள்.


நான் சிறுமியாக இருந்தபோது மாதுரி தீக்ஷித், ஸ்ரீதேவி மேடம், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட அற்புதமான பெண்களுக்கு ரசிகையாக இருந்தேன். மேலும் அவர்களை போன்று ஆக வேண்டுமென விரும்பினேன். எப்படி நடிகையாவது என்றெல்லாம் தெரியாது. ஆனால் நடிகையாவேன் என்று மட்டும் தெரியும்.

நடிகையாவது கூல் என்பதால் அப்படி ஆக வேண்டுமென்று நினைக்கவில்லை. என் சிறு வயதில் என் தோழிகளின் பிறந்தநாள் பார்ட்டிகளில் சோலோவாக ஆட விரும்பினேன். பார்ட்டிகளில் யார் என்று தெரியாதவர்களை கூட அழைத்து ஆடச் செய்தேன். அது தான் என் குணம். பார்ட்டியாக இருந்தாலும், ஆடிஷனாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைத்தேன் என்றார்.

தமன்னாவின் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறுஇருக்கையில் தமன்னாவுக்கும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஜோடியாக வெளியே சென்றாலும் காதலை இதுவரை உறுதி செய்யவில்லை.

Advertisement

Advertisement

Advertisement