• Apr 25 2024

என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு ரொம்ப நன்றி - சமந்தா போட்ட உருக்கமான பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


 தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் யசோதா. ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் ஆக்‌ஷன்-த்ரில்லராக உருவாகியுள்ள 'இப்படத்தில் சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகளையும், வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பிப்பதாகவே இப்படம் அமைந்துள்ளது.ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். மேலும் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் என பலர் நடித்துள்ளனர்.


 படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது.இந்நிலையில் யசோதா படம் வெற்றி பெற்றது குறித்து, நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் உருக்கமான பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

யசோதா படத்தை வெற்றி பெறச்செய்து எனக்கு மிகப்பெரும் பரிசை அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யசோதா படத்தின்போது தியேட்டர்களில் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடியுள்ளனர். யசோதா படக்குழு எந்த அளவுக்கு கடினமாக உழைத்தது என்பதற்கு இதுதான் சான்று.


யசோதா படத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை எனக்கு கொடுத்தார். இயக்குனர்கள் ஹரி, ஹரிஷ் இருவருக்கும் நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்..


Advertisement

Advertisement

Advertisement