• Apr 18 2024

நடிகர் அஜித்குமாரின் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அவரது தந்தையான  பி சுப்ரமணியம் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என தகவல் வெளியாகியிருந்தது.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இவது உடலுக்கு சில திரையுலகப் பிரபலங்கள் மாத்திரம் நேரில் சென்று அஞ்சலி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எந்தெந்த பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விபரம் வெளியாகவில்லை. 


இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கு எனது ழுந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்னும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement