• Apr 24 2024

பரபரப்பு திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்...அடுத்த சேர்மன் யார்..? அர்ஜுனின் சூழ்ச்சி வெற்றி பெறுமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியிலும் ஒளிரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தமிழும் சரஸ்வதியும்'.


தற்போது அர்ஜுனின் சூழ்ச்சியால் தமிழ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.அதாவது தன்னை கத்தியால் குத்தியது தமிழ் என்று கூறி குடும்பத்தையே வெறுக்க வைத்துள்ளார்.



இதன் போது கோதை இன்டஸ்றீக்கு யார் சேர்மனாக நியமிக்கப்போகிறார் என்று கோதையும் அவரது கணவரும் பேசிக்கொள்ள..இதை கேட்டு இருந்த வசுந்தரா சரஸ்வதிக்கு போன் பண்ணி பேசுகின்றார்.



பின் காரத்தியையும் அர்ஜுனையும் வேலையாட்களுடன் பேச சான்ஸ் கொடுங்க என வசுந்தரா கேட்க அதற்கு ஆம் என தமிழின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.



அதன் பின் அர்ஜுன் தன்னுடைய ஆட்களுக்கு சொல்லி..தான் பேசும் போது கை அதிகமாக தட்ட சொல்லி ஆர்டர் போடுகின்றார்.



இதன் பின் இருவரும் வேலையாட்களிடம் பேச இருவருக்கும் அதிக கை தட்டு விழுகின்றது.ஆனால் இதில் யாரை சேர்மன் ஆக்கப்போகின்றார் கோதை என்றும் அடுத்து  அர்ஜுனின் சூழ்ச்சி நடக்குமா..? என பல ரசிகர்களும் காத்து நிற்கின்றனர்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement