விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான்பாரதி கண்ணம்மா.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். சௌந்தர்யா குடும்பம் மண்டபத்துக்கு வர ஷர்மிளா அவர்களை வரவேற்று உள்ளே அனுப்ப சௌந்தர்யா குடும்பம் மொத்தமும் வெண்பாவிற்கு கல்யாணம் நடக்க போகும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
கண்ணம்மா பாரதியை தேட பிறகு சௌந்தர்யா யாரை தேடுற என கேட்க உங்க புள்ளைய தான் என சொல்ல அவன் ஏதோ கான்பிரன்ஸ் மீட்டிங் இருக்கு நீங்க போங்க நான் வரேன்னு சொல்லிட்டான் என சொல்ல கண்ணம்மாவுக்கு சந்தேகம் வருகிறது. முகூர்த்த புடவை வாங்குவதற்காக மேடைக்கு வரும் வெண்பாவின் நடவடிக்கையில் கண்ணம்மாவுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாக அவர் சௌந்தர்யாவிடம் வெண்பா திரும்ப வர மாட்டா பாருங்க இந்த கல்யாணம் நடக்காது என சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.
சௌந்தர்யா அதெல்லாம் வருவா கல்யாணம் நடக்கும் என ஏதோ ஒரு நம்பிக்கையில் பேச கண்ணம்மா சொன்னபடி புடவை மாற்ற போன வெண்பா கதவை திறக்காததால் அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. வெண்பா உள்ள இருக்க மாட்டார் கதவு உடைங்க என கண்ணம்மா சொல்ல ஷர்மிளா அவ புடவை மாத்த லேட் பண்ணுவா என சொல்ல நான் சொல்றத கேளுங்க என்கிட்ட இதுக்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் என் உள் மனசு அதுதான் சொல்லுது என கூறுகிறார்.பிறகு அகிலனும் ரோஹித்தும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே போக வெண்பா ஆளில்லாமல் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Listen News!