• Mar 29 2024

ஜெயம் ரவி மற்றும் த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் கிப்ட் அனுப்பி வைத்த சூர்யா ஜோதிகா தம்பதியினர்- அப்போ கார்த்திக்கு இல்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த 30ம் திகதி வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் இதுவரை 300 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து விட்டதாக லைகா நிறுவனம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் இந்த வெற்றி தன் படத்துக்கு கிடைத்த வெற்றியைப் போல் உணர்வதாக தெரிவித்திருந்தார்


இது தவிர தமிழ்சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.இவரைத் தொர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய மலர் கொத்து ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.


இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை திரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சூர்யா மற்றும் ஜோதிகா அனுப்பிய பரிசை போட்டோ எடுத்து பதிவிட்டு இது மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருப்பதாக குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement