• Apr 19 2024

வளர்த்து தூக்கிவிட்டரையே மிரட்டி கோடியில் பணம் வசூலித்த சூர்யா!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முக்கிய இயக்குநராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரம்மிப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் பாலா.அத்தோடு  வித்தியாசமான நடிப்பு, கதாபாத்திரம், எதார்த்தமான நடிப்பை கலைஞர்களிடம் இருந்து பெறுபவராக திகழ்ந்து வந்தார்.

ஆனால் ஒரு காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு சாப்பாட்டு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக திகழ்ந்தார். கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தினை இயக்க ஆரம்பித்தார்.



மேலும் அப்படத்தினை பல கோடி செலவில் சூர்யா தயாரிக்கவும் செய்தார். ஆனால், பாலா இழுத்தடித்ததாலும் செலவை பல கோடி வரைக்கும் கொண்டு சென்றதாலும் டார்ச்சர் தாங்காமல் சூர்யா படத்தினை விட்டு விலகிவிட்டார்.

அவரை தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து பாலா வணங்கான் படத்தினை இயக்கி வருகிறார். படத்தில் கதாநாயகியாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கிருத்தி செட்டி நடித்து வந்துள்ளார். சூர்யா படத்தில் இருந்து விலகியதால் கிருத்தி செட்டியும் வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இவ்வாறுஇருக்கையில்  வணங்கான் படத்தில் நடிகர் சூர்யா 7 கோடி அளவிற்கு செலவான பணத்தினை பாலாவிடம் கேட்டிருக்கிறார். கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கும் போவேன் என்று மிரட்டியதாக சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதனால் வேறுவழியில்லாமல் 7 கோடி ரூபாய் பணத்தினை சூர்யாவுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. வளர்த்துவிட்டவர் என்றும் பாராமல் சூர்யா இப்படி நடந்து கொண்டாரா என்று பலர் ஷாக்காகி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement