• Apr 20 2024

அடர்ந்த காடுகளில் நடக்கும் சூர்யாவின் கங்குவா பட சூட்டிங்- எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்து வருகின்றன. அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. இதில் விக்ரம் படத்தில் சூர்யா ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டர், படத்தில் சில நிமிடங்களே வந்தபோதிலும் ரசிகர்களை மிரட்டியது.

தொடர்ந்து தற்போது தன்னுடைய 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங், கோவா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடத்தப்பட்டு வருகிறது. தாண்டிக்குடியில் அடர்ந்த காடுகளில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த கொடைக்கானல் சூட்டிங் மே மாதம் மத்தியில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் படத்தின் பிரம்மாண்டமான ப்ரமோ வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இடம் வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்றும் தொல்லியல் சிறப்புமிக்க இடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே மாத மத்தியில் இந்த இடத்திலிருந்து சூட்டிங்கை நிறைவு செய்யும் படக்குழுவினர், அடுத்ததாக எந்த இடத்தில் சூட்டிங் நடத்துவார்கள் என்பதை பின்னர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். மிகுந்த திட்டமிடலுடன் இந்தப் படத்தின் சூட்டிங்கை இயக்குநர் சிவா மேற்கொண்டு வருகிறார். அவர் முதல்முறையாக வரலாற்று பின்னணியில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

படத்தில் சூர்யாவிற்கு திஷா பட்டானி ஜோடியாக நடித்து வருகிறார். மிர்ணாள் தாக்கூரும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சிங்கம் படங்களை தொடர்ந்து சூர்யாவுடன் அவர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.


 இதனிடையே ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படம் மிகப்பெரிய வசூலை பெற்றுத் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்த படக்குழுவினர் சமீபத்தில் படத்தின் டைட்டிலை அறிவித்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோ, விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement