• Apr 24 2024

லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்காலத் தடை... அதிரடியாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கத்தில் உருவான 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரானது சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வருகின்றது. அதாவது அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. 


கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் பதிவிட்டனர். 


இவ்வாறு லீனா மணிமேகலை மீதான புகாரின் அடிப்படையில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யுமாறு கோரித் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். 


அதில் அவர் குறிப்பிடுகையில் இந்த வழக்குகளால் தான் கைது செய்யக்கூடும் என்றும் தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு பலவாறாக விசாரித்தது. 


அத்தோடு லீனாவின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு , அவருடைய மனு தொடர்பான வாதத்தை விளக்கமளிக்க மத்திய அரசு, டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யவும் இடைக்கால தடை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement