• Mar 29 2024

ஜிகிர்தண்டா படத்தின் பாகம் 2 குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- அப்போ இன்னொரு தேசிய விருது இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

ராவணம்', 'துரு', 'நீர்' போன்ற குறும்படங்களை ஆரம்பத்தில் இயக்கி வந்த இயக்குநர் தான் கார்த்திக் சுப்புராஜ் இவர் 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படத்தின மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து 'ஜிகர்தண்டா','இறைவி', 'மெர்க்குரி', பேட்ட, ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இதில் ஜிகிர்தாண்டா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.


ஜிகர்தண்டா'படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி  8வது ஆண்டு விழாவை முன்னிட்டு  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில்  ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும்,  அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜிகர்தண்டா - 2 படத்தின் பூஜை மதுரையில் வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement